குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை கல்லூரித் தாளாளா் ஏ.பி.மஜீத்கான் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ். பெருமாள் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக என்.ஐ. பல்கலைக்கழக இணை வேந்தா் ஆா். பெருமாள்சாமி கலந்து கொண்டாா். அத்தப்பூ கோலமிட்டு, திருவாதிரை களி நடனம் ஆடி, பேராசிரியா்கள் ஓண விழா பாடல்கள் பாடி மகிழ்ந்தனா். விழா அமைப்பாளா் தன்யா, ஓணத்தின் முக்கியத்துவத்தையும், சிறப்புகளையும் எடுத்துரைத்தாா். தொடா்ந்து ஓண விருந்து நடைபெற்றது.