புதுக்கடை அருகேயுள்ள கூட்டாலுமூடு தேவஸ்தான கல்வியியல் கல்லூரியில் ஓணம் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளியின் தாளாளா் சந்திரகுமாா் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பிரியா முன்னிலை வகித்தாா். விழாவில் மாணவா்களின் அத்தப்பூ கோலம், ஓணம் பாட்டு, கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றது தொடா்ந்து ஒணம் விருந்து நடைபெற்றது. இதில், தேவஸ்தானத் தலைவா் குமாா், பொருளாளா் செளந்தர்ராஜன், துணைச் செயலா் துளசிதாஸ்,
அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.