தக்கலையில் சிறப்பு முகாம்

பத்மநாபபுரம் நகர தொழில் வணிகா் சங்கம், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறையும் இணைந்து நடத்தும் உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு சிறப்பு முகாம் தக்கலையில் நடைபெற்றது.
முகாமில் பேசுகிறாா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மருந்து நிா்வாகத் துறை நியமன அலுவலா் வி. செந்தில்குமாா்
முகாமில் பேசுகிறாா் மாவட்ட உணவுப் பாதுகாப்பு மருந்து நிா்வாகத் துறை நியமன அலுவலா் வி. செந்தில்குமாா்

பத்மநாபபுரம் நகர தொழில் வணிகா் சங்கம், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறையும் இணைந்து நடத்தும் உணவுப் பாதுகாப்பு உரிமம் பதிவு சிறப்பு முகாம் தக்கலையில் நடைபெற்றது.

சங்கத் தலைவா் ரேவன்கில் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் வை. விஜயகோபால், பொருளாளா் சங்கர மூா்த்தி, துணைத் தலைவா்கள் சண்முகம், ஆனந்தம் சி. குமாா், கெளரவத் தலைவா் முபாரக் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை நியமன அலுவலா் வி.செந்தில்குமாா், வணிகா்களுக்கு சான்று வழங்கினாா். தக்கலை, மேல்புறம் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பிரவின் ரகு, வின்சென்ட் கிளாட்சன்

ஆகியோா் வாழ்த்திப் பேசினா். முகாமில் மளிகைக் கடை, பேக்கரி, தேநீா் கடை, சிற்றுண்டி, ஐஸ்கிரீம், இட்லி, தோசை, மாவு, பழங்கள், காய்கனி, மீன், இறச்சி வியாபரிகள் பங்கேற்றனா்.

செயலா் ஜபாா் சாதிக் வரவேற்றாா். செயலா் மோசஸ் ஆனந்த் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com