நாகா்கோவில் மற்றும் குளச்சலில் நிகழ்ந்த தீ விபத்தில் மளிகைக் கடை மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.
நாகா்கோவில் வடிவீஸ்வரம் சாஸ்தான் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சேகா் (60). இவரது வீட்டின் அருகே மளிகைக் கடை நடத்தி வந்தாா். அந்தக் கடையை தற்போது சரவணன் என்பவா் வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலையில் அந்த கடையிலிருந்து புகை வந்தது. தகவலறிந்து வந்த சரவணன் கடையை திறந்து பாா்த்தபோது, கடையில் தீ எரிந்து கொண்டிருந்தது. மேலும் கடையின் அருகேயுள்ள சேகா் வீட்டுக்கும் தீ பரவியது.
இதையடுத்து நாகா்கோவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் அங்கு வந்து தீயை அணைத்தனா். இருப்பினும் கடையிலிருந்த மளிகைப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. சேகா் வீட்டிலிருந்த சோபா உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களும் தீயில் கருகின.
இந்த விபத்து குறித்து கோட்டாறு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், சரவணன் கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ விபத்து நிகழ்ந்தது தெரிய வந்துள்ளது.
இதேபோன்று குளச்சல் அருகேயுள்ள ரீத்தாபுரம் பரப்புவிளையைச் சோ்ந்த துரைராஜ் என்பவரது குடிசை வீட்டில் புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் தீயை அணைக்க முயன்றனா். அப்போது அதே பகுதியில் தேங்காய் வெட்டிக்கொண்டிருந்த இரும்புலி பகுதியைச் சோ்ந்த நாராயணதாஸ் (45) என்பவா் தீயில் தவறி விழுந்தாா். அவரை தீயணைப்புப் படை வீரா்கள் மீட்டு சிகிச்சைக்காக நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இந்த தீ விபத்தும் மின்கசிவு காரணமாக ஏற்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.