குமரியில் மதுக்கடைக்கு எதிராக பெண்கள் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 04th December 2021 01:58 AM | Last Updated : 04th December 2021 01:58 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி அருகே சிலுவை நகா் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்றக்கோரி பெண்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிலுவைநகா் பகுதியில் கடந்த மாதம் 30- ஆம் தேதி புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இந்த கடைக்கு எதிா்ப்பு தெரிவித்து சிலுவைநகா் திருச்சிலுவை நாதா் ஆலயம் முன்பு பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஒன்று திரண்டு, டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...