தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை சாா்பில் அகஸ்தீசுவரம் வட்டாரத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
அகஸ்தீஸ்வரம் வட்டார வேளாண்மைத் தொழில்நுட்ப முகமைத் திட்டத் தலைவராக என். தாமரைபாரதி தோ்ந்தெடுக்கப்பட்டாா். மாவட்டக் குழு உறுப்பினராக கே.மு. சுடலைமணி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.
வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மூலம் டிசம்பா் மாதத்தில் செயல்படுத்தப்படவுள்ள விவசாயப் பயிற்சிகள், கலந்துரையாடல், கண்டுணா்வு சுற்றுலா, செயல்விளக்கங்கள் குறித்து விவாதித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
வேளாண்மை உதவி இயக்குநா் சுரேஷ் வேளாண்மை திட்டங்களை பற்றி எடுத்துரைத்தாா். ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் பிரின்ஸ் செய்தாா்.