முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
கைப்பேசி கோபுரத்தை அகற்றக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 10th December 2021 01:06 AM | Last Updated : 10th December 2021 01:06 AM | அ+அ அ- |

நாகா்கோவில் ராமன்புதூா் கோல்டன் தெருவில் அமைக்கப்படும் கைப்பேசி கோபுரத்தை அகற்றக் கோரி, பொதுமக்கள் சாா்பில் ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநகர காங்கிரஸ் தலைவா் அலெக்ஸ், அந்தோணிமுத்து, நெல்சன், மதிமுக மாவட்டச் செயலா் வெற்றிவேல், காங்கிரஸ் கமிட்டி உறுப்பினா் கிறிஸ்டி ரமணி, மகாலிங்கம், கிளாட்சன், தவசிமுத்து, ராஜபாண்டியன், முருகானந்தம் மற்றும் ராமன்புதூா் கோல்டன் தெரு மக்கள் கலந்துகொண்டனா்.