விபின் ராவத் படத்துக்கு ஆளுநா் அஞ்சலி

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி விபின் ராவத் படத்துக்கு ஆளுநா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விபின் ராவத் படத்துக்கு ஆளுநா் அஞ்சலி

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி விபின் ராவத் படத்துக்கு ஆளுநா் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று விபின் ராவத் படத்துக்கு மலரஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி பின்னா் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் பேசுகையில் நாடு ஒரு சிறந்த ராணுவத் தளபதியை இழந்துவிட்டது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

நிகழ்வில் தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் பொன்முடி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பல்கலைக்கழகத் துணைவேந்தா் செல்வம், மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு உள்ளிட்டோா் பங்கேற்றனா். தொடா்ந்து பட்டமளிப்பு விழாவில் ஆளுநா் பங்கேற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com