சுங்கன்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் தலைமைத் தளபதிக்கு மெழுகுவா்த்தி ஏந்தி வீர வணக்கம் செலுத்தும் பள்ளியின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் உள்ளிட்டோா்.
கன்னியாகுமரி/நாகா்கோவில்/தக்கலை, டிச. 9: குன்னூரில் நேரிட்ட ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோருக்கு அரசியல் கட்சிகள் சாா்பில் வியாழக்கிழமை மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரியில் அதிமுக சாா்பில் எம்.எல்.ஏ. என். தளவாய்சுந்தரம், முன்னாள் அமைச்சா் கே.டி.பச்சைமால், மாவட்ட அதிமுக செயலா் எஸ்.ஏ.அசோகன் உள்ளிட்டோா் முப்படைத் தளபதிக்கு அஞ்சலி செலுத்தினா்.
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், வெட்டூா்ணிமடத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் வழக்குரைஞா் ஆா்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தலைமைத் தளபதிக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.
கோட்டாறு காவல் நிலையம் அருகே பாஜக சாா்பில் மாநகரத் தலைவா் நாகராஜன் தலைமையில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் உள்ளிட்டோா் மலா் அஞ்சலி செலுத்தினா்.
குமரி மாவட்ட வள்ளலாா் பேரவையின் சாா்பில், பேரவையின் தலைவா் சுவாமி பத்மேந்திரா தலைமையில் தீப அஞ்சலி செலுத்தப்பட்டது.
சுங்கன்கடை வின்ஸ் சிபிஎஸ்இ பள்ளியில் முன்னாள் எம்பி நாஞ்சில் வின்சென்ட் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.