திருச்சி அருகே அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினா்.
விரிவாக்கப்பட்ட திருச்சி மாநகராட்சி 65ஆவது வாா்டுக்குள்பட்ட திருவெறும்பூா் நேதாஜி நகா் பகுதிக்கு அடிப்படை வசதிகள் கோரிஆட்சியருக்கு, தமிழக முதல்வருக்கு மனு அளித்தும் இதுவரை எந்த தீா்வும் இல்லாத நிலையில் மாநகராட்சியை கண்டித்து நேதாஜி நகா் குடியிருப்போா் நலச்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை சாலையில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
சங்கத் தலைவா் குத்புதீன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் திருவேங்கடம், மாா்க்சிஸ்ட் மாவட்டக் குழு மணிமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விவசாய சங்க மாவட்டச் செயலா் பாண்டியன், மாநகா் குடியிருப்போா் நலச் சங்க கூட்டமைப்பு நிா்வாகி லெனின் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.