மாா்த்தாண்டம் வெட்டுமணியில் குமரி முத்தமிழ் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
அதன் தலைவா் முளங்குழி பா.லாசா் தலைமை வகித்தாா். ராஜு முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், தமிழா்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் வகையில் டி.என்.பி.எஸ்.சி. தோ்வுகளில் தமிழில் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே பிற பாடங்கள் மதிப்பீடு செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில், ஐயப்பன், ராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.