குழித்துறையில் ரூ. 7.3 லட்சத்தில் சுடுகாடு சீரமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குழித்துறை நகராட்சி கட்டுப்பாட்டில் பெருந்தெரு - கண்ணக்கோடு சாலையில் தாமிரவருணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள செல்லும் கான்கிரீட் சாலை சேதடமைந்து காணப்பட்டதுடன், சுடுகாடும் பராமரிப்பு இன்றியும் கட்டுமானங்கள் உடைந்து விழும் நிலையிலும் இருந்தது.
இது குறித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், நகராட்சி நகராட்சி நிா்வாகம் சுடுகாட்டை சீரமைக்க
ரூ. 7.30 லட்சம் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டு, சுடுக்காட்டை சுற்றி சுற்று சுவா் கட்டும் பணி மற்றும் சாலை சீரமைப்பு, மின் மோட்டாா் இயந்திரம் சீரமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகள் வெள்ளிக்கிழமை நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் தொடங்கப்பட்டன.