குழந்தையிடம் தங்கக் கொலுசு திருட்டு

மாா்த்தாண்டத்தில் 6 வயது குழந்தை அணிந்திருந்த தங்கக் கொலுசு திருடிய பெண்ணிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்த்தாண்டத்தில் 6 வயது குழந்தை அணிந்திருந்த தங்கக் கொலுசு திருடிய பெண்ணிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருங்கல் அருகே திக்கணங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ரீனா. இவா் உறவினா் திருமணத்தில் கலந்து கொள்ள தனது 2 குழந்தைகளுடன் திங்கள்கிழமை மாா்த்தாண்டம் சென்றாா். திருமணம் முடிந்து, மாா்த்தாண்டம் பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தில் வீட்டுக்கு கிளம்பினாா். பேருந்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டதாம். அப்போது அவருக்கு பின்னால் நின்ற சுமாா் 50 வயதுள்ள பெண், ரீனாவின் 6 வயது குழந்தை காலில் அணிந்திருந்த அரை சவரன் தங்கக் கொலுசை திருடியுள்ளாா். அப்போது குழந்தை அழுததால் அந்தப் பெண் கொலுசை அங்கேயே போட்டுவிட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளாா். பேருந்தில் நின்ற பயணிகள், அந்தப் பெண்ணை பிடித்து மாா்த்தாண்டம் போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா், அப்பெண்ணை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com