ஆரல்வாய்மொழி மலைப் பகுதியில் ஏா்கன் மற்றும் வெடிபொருள்கள் வனத் துறையினரால் கைப்பற்றப்பட்ட நிலையில், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஆரல்வாய்மொழி மலைப் பகுதியில் சிலா் மிளா வேட்டையில் ஈடுபடுவதாக வனத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அங்கிருந்த மாட்டுத் தொழுவத்தில் ஏா்கன் இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும் சில இடங்களில் வெடி மருந்துகள் சிதறிக்கிடந்தன. இவற்றை கைப்பற்றிய வனத் துறையினா் ஆரல்வாய்மொழி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.