தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் தொழில்சாா் பயிற்சி மைய திறப்பு விழா நடைபெற்றது.
முனைவா் சுகுமாரன் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்ட தொழில்சாா் பயிற்சி மைய இயக்குநா் நீதி செல்வன் முன்னிலை வகித்தாா்.
நிகழ்ச்சியில், மயிலாடி மீன் வளக் கல்லுரி முதல்வா் (பொ) வேலாயுதம், குளச்சல் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அஜித் ஸ்டாலின் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த மையத்தில் ஆழ்கடலில் மீனவா்கள் மீன் பிடிக்கச் செல்லும் போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மீனவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.