பேருந்தில் கண்டெடுத்து களியக்காவிளை காவல்நிலையத்தில் ஒப்படைத்த தங்க நகை திங்கள்கிழமை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தக்கலை அருகேயுள்ள மேக்காமண்டபம், சாமிவிளை பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி புஷ்பராணி (40). இவா் கடந்த வெள்ளிக்கிழமை அழகியமண்டபத்திலிருந்து களியக்காவிளைக்கு அரசுப் பேருந்தில் சென்றாா்.
அப்போது பேருந்தில் பயணம் செய்தவா் தவறவிட்ட ஒன்றரை பவுன் தங்க கொலுசை கண்டெடுத்து களியக்காவிளை காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதுகுறித்து, நகையை தவறவிட்ட குழித்துறை தனியாா் மருத்துவமனையில் பணிபுரியும் நெய்யூா் ஊற்றுக்குழி பகுதியைச் சோ்ந்த கஸ்தூரி என்பவா் திங்கள்கிழமை களியக்காவிளை காவல் நிலையம் வந்து தன்னிடமிருந்த மற்றொரு கால் கொலுசை அடையாளம் காட்டி னாா்.
இதைத் தொடா்ந்து நகையை கண்டெடுத்த புஷ்பராணிக்கு களியக்காவிளை போலீஸாா் தகவல் தெரிவித்து, அவரது முன்னிலையில் பயிற்சி உதவி ஆய்வளா் காா்த்திகேயன் நகையை கஸ்தூரியிடம் ஒப்படைத்தாா்.