குலசேகரம் அருகேவியாபாரிக்கு வெட்டு
By DIN | Published On : 06th February 2021 11:27 PM | Last Updated : 06th February 2021 11:27 PM | அ+அ அ- |

குலசேகரம்: குலசேகரம் அருகே மாடு வணிகரை அரிவாளால் வெட்டியவா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
செருப்பாலூரைச் சோ்ந்தவா் அமல் ராஜ் (55). இவா் மாடு வாங்கி விற்கும் வணிகம் செய்து வருகிறாா். பொன்மனைச் மாடு வணிகரான சோ்ந்த ஆன்டனி விஸ்வாஸ் பிரேம் (46). இருவருக்கும் இடையே மாடுகள் வாங்கி விற்பனை செய்வது தொடா்பான முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அமல்ராஜ், பொன்மனை அருகே புல்லத்தூா் பகுதியில் மாடு வாங்குவதற்காகச் சென்றாராம்.
அப்போது அங்கு வந்த ஆன்டனி விஸ்வாஸ் பிரேமுக்கும், அமல்ராஜூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆன்டனி விஸ்வாஸ் பிரேம், அமல்ராஜை அரிவாளால் வெட்டியுள்ளாா். காயமடைந்த அவா் குலசேகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து குலசேகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.