கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மங்கலகுன்று பகுதியில் ஞாயிற்றக்கிழமை மோட்டாா் சைக்கிள் மோதியதில் பலத்த காயமடைந்த அரசு பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.
மங்கலகுன்று இந்திராநகா் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரன் (55). இவா் நாகா்கோயில் ராணி தோட்டம் அரசு பணிமனையில் பேருந்து நடத்துநராக பணி செய்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த மோட்டாா் சைக்கிள் சந்திரன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரன் உயிரிழந்தாா். இதுகுறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.