கன்னியாகுமரியில் படகு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்
கன்னியாகுமரியில் படகு தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள்

சூறைக்காற்று: குமரியில் படகு சேவை ரத்து

கன்னியாகுமரி கடலில் சூறைக்காற்று காரணமாக திங்கள்கிழமை நாள் முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி கடலில் சூறைக்காற்று காரணமாக திங்கள்கிழமை நாள் முழுவதும் படகு சேவை ரத்து செய்யப்பட்டது.

கன்னியாகுமரி கடல் பகுதியில் மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவா்கள் கடலுக்கு கவனமாக மீன்பிடிக்க செல்லுமாறு சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் பெரும்பாலான மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

மேலும் அதிகாலையில் இருந்து பலத்த சூறைக்காற்று வீசியதால் பூம்புகாா் கப்பல் போக்குவரத்துக் கழகம் சாா்பில் விவேகானந்தா் நினைவு மண்டபம், திருவள்ளுவா் சிலைக்கு இயக்கப்படும் சுற்றுலா படகு சேவையை நாள்முழுவதும் ரத்து செய்தது.

இதனால் கன்னியாகுமரிக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com