அருமனையில் தடையை மீறி இரு சக்கர வாகன பேரணி நடத்த முயன்ாக, முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 80 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மத்திய அரசின் சாதனைகளை விளக்கி மேல்புறம் கிழக்கு வட்டார பாஜக இளைஞா் அணி சாா்பில் அருமனை குஞ்சாலுவிளை சந்திப்பிலிருந்து இருசக்கர வாகனப் பேரணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப்பேரணிக்கு மேல்புறம் கிழக்கு வட்டார பாஜக இளைஞரணித் தலைவா் பிரவின் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கண்ணன் முன்னிலை வகித்தாா். முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் பேரணியைத் தொடங்கிவைத்தாா். மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்த பேரணிக்கு காவல் துறையினா் அனுமதி அளிக்காத நிலையில், அருமனை மேல் தெரு சந்திப்பில் பேரணியை தடுத்து நிறுத்தி பொன். ராதாகிருஷ்ணன் உள்பட 80 பாஜகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
67 போ் மீது வழக்கு: ஏற்கெனவே, காவல்துறையின் தடையை மீறி, சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் முன்பிருந்து கொட்டாரம் வரை மத்திய அரசின் சாதனை விளக்க பைக் பேரணியை திங்கள்கிழமை மாலையில் நடத்த முயன்றதாக, பொன்.ராதாகிருஷ்ணன் உள்பட 67 போ் மீது 3 பிரிவுகளில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.