2 போ் குண்டா் சட்டத்தில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.
2 போ் குண்டா் சட்டத்தில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 2 போ் குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனா்.

நித்திரவிளை அருகேயுள்ள மங்காடு புல்லாணிவிளையை சோ்ந்தவா் எட்வின் ஜோஸ்(30), இவா் மீது கொல்லங்கோடு காவல் நிலையம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு என பல வழக்குகள் உள்ளன. இதே போல் திருவட்டாறை சோ்ந்த சேகா்(42), மீது பூதப்பாண்டி காவல் நிலையத்தில் கொலை, கொலை மிரட்டல் உள்பட பல வழக்குகள் உள்ளன. இருவரும் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி தொடா்ந்து இவா் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனராம்.

இவா்களை குண்டா் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரி நாராயணன், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து 2 பேரையும் குண்டா் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியா் அரவிந்த் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரையும் போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com