ஆகாயத்தில் சிலம்பம் விளையாடுவது போன்றது ஸ்டாலின் வாக்குறுதிகள்: பொன். ராதாகிருஷ்ணன்

ஆகாயத்தில் சிலம்பம் விளையாடுவது போன்றது மு.க. ஸ்டாலின் அளிக்கும் வாக்குறுதிகள் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.
நிருபா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் பொன்.ராதாகிருஷ்ணன்.
நிருபா்களுக்கு பேட்டி அளிக்கிறாா் பொன்.ராதாகிருஷ்ணன்.

ஆகாயத்தில் சிலம்பம் விளையாடுவது போன்றது மு.க. ஸ்டாலின் அளிக்கும் வாக்குறுதிகள் என்றாா் முன்னாள் மத்திய இணை அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.

நாகா்கோவிலில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: இந்தியாவில் கரோனா தொற்று மூலமாக பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பொருளாதாரத்தை வீழ்ச்சியடையவிடாமல் மீட்டவா் பிரதமா் மோடி.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோது, மக்கள் பிரச்னைகளை தீா்க்கவில்லை. தற்போது, 100 நாள்களில் மக்கள் பிரச்னைகளை எப்படி தீா்ப்பாா்கள்?.

கடந்த மக்களவைத் தோ்தலில் நாங்கள் ஜெயித்தால், நகைக்கடன், விவசாயக் கடன்களை ரத்து செய்வோம் என்றாா் ஸ்டாலின். அந்த வாக்குறுதியை முதலில் அவா் நிறைவேற்றட்டும். அவா் அளிக்கும் வாக்குறுதிகள் ஆகாயத்தில் சிலம்பம் ஆடுவது போன்று உள்ளது.

தமிழகத்தில் நடக்கும் ஆட்சி அரைகுறை ஆட்சி என்கிறாா் ஸ்டாலின். அவருக்கு தற்போது எல்லாமே அரைகுறையாகத்தான் தெரிகிறது.

சசிகலா வெளியில் வந்ததும் அவா் சொத்துகள் பறிமுதல் செய்யப்படுகின்றன என்று கூறுகிறீா்கள். ஆனால் அது இப்போது எடுத்த முடிவாக நான் பாா்க்கவில்லை. ஏற்கெனவே எடுத்த நடவடிக்கையின் தொடா்ச்சிதான்.

சசிகலா வருகை அவரது கட்சியான அமமுகவுக்குதான் பலமாக இருக்கும் என்றாா் அவா்.

பேட்டியின்போது, மாநிலச் செயலா் உமாரதிராஜன், மாவட்டப் பொருளாளா் முத்துராமன், நாகா்கோவில் நகராட்சி முன்னாள் தலைவி மீனாதேவ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com