கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 5 போ் கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே 16,930 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,935 ஆக உயா்ந்துள்ளது. வியாழக்கிழமை 10 போ் உள்பட இதுவரை 16,593 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 83 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனா்.