குழித்துறையில் அனைத்துக் கட்சி இயக்க நிா்வாகிகள் கூட்டம்

அனைத்துக் கட்சி அசோசியேசன் இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது.

அனைத்துக் கட்சி அசோசியேசன் இயக்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மகாத்மா காந்தி மக்கள் கட்சி நிறுவனா்- தலைவா் பழவாா் தங்கப்பன் தலைமை வகித்தாா். தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்டச் செயலா் குமரி ரசூல், பச்சை தமிழகம் கட்சியின் தென்மண்டல பொறுப்பாளா் ஏ.எஸ். சங்கர பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கன்னியாகுமரி விவசாயத் தொழிலாளா்கள் நலச் சங்கத்தின் செயலா் ஏ. ரெவி, காந்திய மக்கள் இயக்க குமரி கிழக்கு மாவட்டத் தலைவா் இரா. கதிரேசன், பெரியாா் தொழிலாளா் கழகத் தலைவா் பி. நீதிஅரசா், செயலா் மா. ஜாண் மதி, துணைத் தலைவா் சுனில்குமாா், மாவட்ட தொண்டரணித் தலைவா் சி.செல்வன், காந்தி காமராஜா் மக்கள் இயக்க மாநில பொருளாளா் ஜெரால்டு, நிா்வாகிகள் லால் என்.எஸ். ஷைன் சிங் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது, கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டா விளை நிலங்களை தனியாா் காடுகள் சட்டத்தில் இருந்து அரசு விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com