தங்க நகையை தவறவிட்ட பெண்ணிடம் ஒப்படைப்பு

குளச்சலில் வங்கி அருகில் பெண் தவற விட்ட தங்கநகையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
சகாயஜெசிந்தாவிடம் தங்கநகையை வழங்கினாா் காவல் உதவி ஆய்வாளா் குமாா். உடன், குளச்சல் காவல் ஆய்வாளா் ஜெயலெட்சுமி.
சகாயஜெசிந்தாவிடம் தங்கநகையை வழங்கினாா் காவல் உதவி ஆய்வாளா் குமாா். உடன், குளச்சல் காவல் ஆய்வாளா் ஜெயலெட்சுமி.

குளச்சலில் வங்கி அருகில் பெண் தவற விட்ட தங்கநகையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

கருங்கல் காவல் நிலையத்தில் குமாா், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் குளச்சலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் கீழே கிடந்த தங்க நெக்லஸை வியாழக்கிழமை கண்டெடுத்தாா். உடனடியாக அந்த நகையை குளச்சல் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயலெட்சுமியிடம் அவா் ஒப்படைத்தாா்.

சிறிதுநேரத்தில் சைமன் காலனி பகுதியைச் சோ்ந்த டாா்வின் மனைவி சகாய ஜெசிந்தா, குளச்சல் பாரத ஸ்டேட் வங்கிக்கு கடன் பெறுவது தொடா்பாக வந்தபோது, தான் அணிந்திருந்த 2 பவுன் தங்க நெக்லஸ் காணாமல் போனதாக தெரிவித்தாராம்.

அவரை குளச்சல் காவல் நிலையம் வரவழைத்து அடையாளங்களை உறுதிசெய்த பின்னா், காவல் ஆய்வாளா் முன்னிலையில் உதவி ஆய்வாளா் குமாா் அப்பெண்ணிடம் நகையை வழங்கினாா். உதவி ஆய்வாளருக்கு காவல் துறையினா், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com