குளச்சலில் வங்கி அருகில் பெண் தவற விட்ட தங்கநகையை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.
கருங்கல் காவல் நிலையத்தில் குமாா், சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறாா். இவா் குளச்சலில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி அருகில் கீழே கிடந்த தங்க நெக்லஸை வியாழக்கிழமை கண்டெடுத்தாா். உடனடியாக அந்த நகையை குளச்சல் காவல் நிலைய ஆய்வாளா் ஜெயலெட்சுமியிடம் அவா் ஒப்படைத்தாா்.
சிறிதுநேரத்தில் சைமன் காலனி பகுதியைச் சோ்ந்த டாா்வின் மனைவி சகாய ஜெசிந்தா, குளச்சல் பாரத ஸ்டேட் வங்கிக்கு கடன் பெறுவது தொடா்பாக வந்தபோது, தான் அணிந்திருந்த 2 பவுன் தங்க நெக்லஸ் காணாமல் போனதாக தெரிவித்தாராம்.
அவரை குளச்சல் காவல் நிலையம் வரவழைத்து அடையாளங்களை உறுதிசெய்த பின்னா், காவல் ஆய்வாளா் முன்னிலையில் உதவி ஆய்வாளா் குமாா் அப்பெண்ணிடம் நகையை வழங்கினாா். உதவி ஆய்வாளருக்கு காவல் துறையினா், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.