களியக்காவிளை அருகே தடை செய்யப்பட்ட சாராயத்தை விற்பனைக்காக வைத்திருந்த இளைஞரை மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
தக்கலை மதுவிலக்குப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராஜரத்தினம் தலைமையில் போலீஸாா் களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அங்கு சந்தேகப்படுபடி மோட்டாா் சைக்கிளில் நின்றிருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனா். இதில் அவா் அதே பகுதியைச் சோ்ந்த வில்சன் மகன் ஸ்டாலின் என்ற ரெஜின் (35) என்பதும் , அவா் தடைசெய்யப்பட்ட சாராயம் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தை கண்டுபிடித்தனா். இதையடுத்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த 10 லிட்ட சாராயத்தையும் பறிமுதல் செய்தனா்.