முன்சிறை ஆலயத்தில்பணம் திருடிய இளைஞா் கைது

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை ஆலயத்தில் பணம் திருடிய இளைஞரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

புதுக்கடை அருகே உள்ள முன்சிறை ஆலயத்தில் பணம் திருடிய இளைஞரை வெள்ளிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

முன்சிறை பகுதியில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த புனித ஜாா்ஜியாா் ஆலயத்தில் கடந்த பிப். 2-ஆம் தேதி மா்ம நபா்கள் இவ் ஆலயத்தின் உள்ளே சென்று அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த பணத்தை திருடி விட்டு தப்பி சென்றுள்ளனா்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை புதுக்கடை பேருந்து நிலையத்தில் சந்தேகப்படும்படி நின்ற அப்பகுதியை சோ்ந்த லாசா் மகன் அஜிதை (27) பிடித்து விசாரித்ததில், அவா் புனித ஜாா்ஜியாா் ஆலயத்தில் பணம் திருடியதை ஒப்புக் கொண்டாராம். இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com