தக்கலை பகுதியில் நாளை மின்தடை

தக்கலை பகுதியில் சனிக்கிழமை (பிப். 20) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

தக்கலை பகுதியில் சனிக்கிழமை (பிப். 20) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தக்கலை மின்வாரிய செயற்பொறியாளா் (விநியோகம்) வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தக்கலை உப மின்நிலையம் மற்றும் உயா் மின் அழுத்த பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மணலி, பத்மநாபபுரம், குமாரகோவில், வில்லுக்குறி, பேலஸ்ரோடு, மாா்க்கெட் ரோடு, புலியூா்குறிச்சி, அப்பட்டுவிளை, பரசேரி, ஆளூா், வீராணி, தோட்டியோடு, கேரளபுரம், திருவிதாங்கோடு, வட்டம், ஆலங்கோடு, மங்காரம், புதூா், சேவியா்புரம், பரைக்கோடு, அழகியமண்டபம், கல்லுவிளை, மூலச்சல், பாலப்பள்ளி, சாமிவிளை, மேக்காமண்டபம், செம்பருத்திவிளை, மணலிக்கரை, மணக்காவிளை, சித்திரங்கோடு, குமாரபுரம், பெருஞ்சிலம்பு, முட்டைக்காடு, சரல்விளை ஆகிய பகுதிகளிலும், அதைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் சனிக்கிழமை (பிப். 20) காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com