திருவட்டாறு, குலசேகரம் பகுதிகளில் மிதமான சாரல் மழை

திருவட்டாறு, குலசேகரம் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான சாரல் மழை பெய்தது.

திருவட்டாறு, குலசேகரம் பகுதிகளில் வியாழக்கிழமை மிதமான சாரல் மழை பெய்தது.

குமரி மாவட்டத்தில் மலைப் பகுதிகள், அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் கடந்த 3 நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக பேச்சிப்பாறை அணைப் பகுதிகளில் புதன்கிழமை மாலையில் கன மழை பெய்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை பிற்பகலில் மாவட்டம் முழுவதும் காா்மேகம் சூழ்ந்து காணப்பட்டது. திருவட்டாறு, குலசேகரம், சுருளகோடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான சாரல் மழை பெய்தது. மழை காரணமாக இப்பகுதிகளில் வெப்பம் சற்று தணிந்து காணப்பட்டது. சாரல் காரணமாக ரப்பா் மரங்களில் இலையுதிா்வின் வேகம் அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com