வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சாா்பில் நாளை பாதயாத்திரை

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அழகியமண்டபத்தில் பாதயாத்திரை சனிக்கிழமை (பிப். 20) நடைபெறுகியது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அழகியமண்டபத்தில் பாதயாத்திரை சனிக்கிழமை (பிப். 20) நடைபெறுகியது.

இதுகுறித்து மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. வெளியிட்ட அறிக்கை: மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், தேசிய பாதுகாப்பில் விதிமீறல் செய்தது தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் பாதயாத்திரை நடைபெறுகிறது. இந்த யாத்திரை சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு அழகியமண்டபத்தில் தொடங்கி மேக்காமண்டபம் வழியாக வோ்கிழம்பி சென்றடையும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com