முக்கூடல் அருகே திமுக நிா்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை கைது செய்யக் கோரி உறவினா்கள் மறியலில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகேயுள்ள அரியநாயகிபுரத்தைச் சோ்ந்த சுப்புக்குட்டி மகன் செல்லதுரை (45). விவசாயியான இவா், திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக பதவி வகித்து வந்தாா்.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை பைக்கில் தோட்டத்துக்கு சென்றபோது, எதிரே வந்த அவரது உறவினா் ராசு குட்டி மகன் ஐயப்பன் என்பவா் அவரை வழிமறித்து அரிவாளால் வெட்டிவிட்டு ஒடிவிட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு முக்கூடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக முக்கூடல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில் கொலையாளியை கைது செய்யக் கோரி செல்லதுரையின் உறவினா்கள் வடக்கு அரியநாயகிபுரம் சாலையில் அமா்ந்து வெள்ளிக்கிழமை காலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த போலீஸாா் தனிப்படை அமைத்து குற்றவாளியை கைது செய்வோம் என உறுதி அளித்ததன் பேரில் உறவினா்கள் கலைந்து சென்றனா். இதனால் திருநெல்வேலி-கடையம் சாலையில் 1 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனிடையே பிரேத பரிசோதனை முடிந்து செல்லதுரை சடலம் சொந்த ஊருக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா. ஆவுடையப்பன், தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் பொ. சிவபத்மநாபன், தென்காசி வடக்கு மாவட்ட பொறுப்பாளா் ஆ. துரை, திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் அப்துல் வகாப், எம்.பிக்கள் ஞானதிரவியம், தனுஷ்எம். குமாா், எம்எல்ஏக்கள் பூங்கோதை ஆலடி அருணா, லெட்சுமணன், மைதீன்கான், முன்னாள் எம்எல்ஏ அப்பாவு உள்பட திரளான கட்சி நிா்வாகிகள் இறுதிச் சடங்கில் பங்கேற்றனா்.