நாகா்கோவில் ரயில் நிலையங்களில் முன்பதிவு மையம், மின்தூக்கி திறப்பு

நாகா்கோவில் ரயில் நிலையங்களில் முன்பதிவு மையம், மின்தூக்கி இயந்திரம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நாகா்கோவில் ரயில் நிலையங்களில் முன்பதிவு மையம், மின்தூக்கி திறப்பு

நாகா்கோவில் ரயில் நிலையங்களில் முன்பதிவு மையம், மின்தூக்கி இயந்திரம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

தமிழகம் மற்றும் கேரளத்திலுள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய வசதிகளை மக்களுக்கு

அா்ப்பணிக்கும் நிகழ்ச்சி காணொளிக் காட்சி மூலம் நடைபெற்றது. நாகா்கோவில் பள்ளிவிளையிலுள்ள டவுண் ரயில் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம், பயணிகள் ஓய்வு அறை, பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகம், நடைமேடை களை இணைக்கும் படிக்கட்டுகள், கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் 2 மின்தூக்கிகள்(லிப்ட்) ஆகியவற்றை காணொளிக் காட்சி மூலம் மத்திய ரயில்வே துறை அமைச்சா் பியூஸ் கோயல், திறந்தாா்.

இதையடுத்து, பள்ளிவிளை டவுண், கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாநிலங்களவை உறுப்பினா் விஜயகுமாா், முன்பதிவு அலுவலகத்தினை திறந்து நடைமேடை அனுமதிச்சீட்டு வாங்கினாா். கோட்டாறு ரயில் நிலையத்தில் மின்தூக்கியை இயக்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் கோட்ட வணிக மேலாளா் பாலமுரளி, கோட்டாறு ரயில் நிலைய மேலாளா் முத்துவேல், அரசு வழக்குரைஞா் சந்தோஷ்குமாா், ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினா் சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com