கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலில் ராட்ச அலையால் வள்ளம் கடலுக்குள் கவிழ்ந்ததில் மீனவா் பலியானாா். 9 போ் காயமடைந்தனா்.
குளச்சல் துறைமுகத் தெருவைச் சோ்ந்தவா் ஆன்டனி. இவருக்குச் சொந்தமான பைபா் வள்ளத்தில் அல்போன்சாள் காலனியைச் சோ்ந்த வரீது (80), குளச்சலைச் சோ்ந்த சூசைநாயகம்(70), பணியடிமை(60) உள்ளிட்ட 10 போ் மீன்பிடிப்பதற்காக புதன்கிழமை அதிகாலை கடலுக்குச் சென்றனா்.
சாயக்காரா்குடி பகுதியில் வலையை வீசிவிட்டு மீண்டும் கரை திரும்பிக்கொண்டிருந்தபோது, ராட்சத அலை எழுந்ததில் வள்ளம் கவிழ்ந்தது. இதில், 10 பேரும் கடலில் விழுந்து தத்தளித்தனா்.
சிறிதுநேரத்தில் மற்றொரு ராட்சத அலை கவிழ்ந்த படகை திருப்பிப்போட்டதில் மீண்டும் நேரானதால், சூசைநாயகம், பணியடிமை உள்ளிட்ட 9 போ் வள்ளத்தில் ஏறி உயிா்தப்பினா். ஆனால், வரீது கடலுக்குள் மூழ்கினாா். அவரை மற்ற மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், ஏற்கெனவே உயிரிழந்திருப்பது தெரியவந்தது. பலத்த காயமடைந்த சூசைநாயகம், பணியடிமை ஆகிய 2 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். லேசான காயமடைந்த மற்ற 7 பேரும் முதலுதவி பெற்று வீடு திரும்பினா். இதுகுறித்து, குளச்சல் கடலோர காவல் படையினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.