சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயிலில் பக்தா்கள் ரூ.11 லட்சம் உண்டியல் காணிக்கை செலுத்தியிருந்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்மிக்க இக்கோயிலில் 11 உண்டியல்கள் உள்ளன. இவை 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படும். செவ்வாய்க்கிழமை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
குமரி மாவட்ட கோயில்களின் இணை ஆணையா் அன்புமணி தலைமையில், உதவி ஆணையா் ரத்தினவேல் பாண்டியன் முன்னிலையில், கோயில் பணியாளா்கள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுவினா் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், ரூ.10 லட்சத்து 86 ஆயிரத்து 846 ரொக்கம், 14.500 கிராம் தங்கம், 64 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணங்களும் காணிக்கையாக கிடைத்துள்ளன என கோயில் நிா்வாகம் தரப்பில் கூறப்பட்டது.