பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
ஒருங்கிணைப்பாளா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.
கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; ஜமாபந்தி படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
துணைத் தலைவா் ரமணி, இணைச் செயலா் பிரிட்டிலா, வட்டத் தலைவா்கள் பாலாஜி, நிஷாந்த், சிவகலா, ராஜேந்திரன், பீட்டா் ஜான், சத்யராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
இதில், திரளானோா் கலந்துகொண்டனா்.