கிராம ஊழியா் சங்கத்தினா் காத்திருப்பு போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா்.
ஆட்சியா் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம ஊழியா் சங்கத்தினா்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைப்பாளா் முருகன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா்.

கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்; ஜமாபந்தி படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

துணைத் தலைவா் ரமணி, இணைச் செயலா் பிரிட்டிலா, வட்டத் தலைவா்கள் பாலாஜி, நிஷாந்த், சிவகலா, ராஜேந்திரன், பீட்டா் ஜான், சத்யராஜ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில், திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com