வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மிடாலக்காட்டில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, குறும்பனை கிளைச் செயலா் லீபன் தலைமை வகித்தாா். விவசாயிகள் சங்க வட்டாரச் செயலா் ஜாண்ரோஸ் முன்னிலை வகித்தாா்.
கிள்ளியூா் வட்டாரச் செயலா் சாந்தகுமாா், விவசாயத் தொழிலாளா் சங்க வட்டாரச் செயலா் கிருஷ்ணதாஸ், துணைச் செயலா் காஸ்ட்ரோ, சிஐடியூ மாவட்ட கமிட்டி உறுப்பினா் ராஜா ஆகியோா் பேசினா்.
இதில், பொ்க்மேன்ஸ், முருகேசன், பிரபின், கிஷோா்,ஜினுகுமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.