தமிழ்நாடு மகாத்மா காந்தி மக்கள் கட்சி நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் குழித்துறையில் நடைபெற்றது.
கட்சியின் நிறுவனா் - தலைவா் பழவாா் சி. தங்கப்பன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கொடுங்குளம் ராஜேந்திரன், குழித்துறை நகரத் தலைவி கே.பி. சாவித்ரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 11 ஆம் தேதி குழித்துறை சந்திப்பில் ஆா்ப்பாட்டம் நடத்துவது, சட்டப் பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத் தோ்தலிலும் மகாத்மா காந்தி மக்கள் கட்சி சாா்பில் வேட்பாளா்கள் நிறுத்துவது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், நகரத் தலைவா் எம். சனில்குமாா், மாவட்ட மகளிரணி தலைவி சி. கிளமன்சியா மேரி, மாவட்டச் செயலா் சி.பி. செந்தில், மாவட்ட இணைச் செயலா் அனீஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.