கொல்லங்கோடு அருகே பெண்ணின் இறப்பில் மா்மம் உள்ளதாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
கொல்லங்கோடு காவல் சரகம், நடைக்காவு, ஒற்றப்பனைவிளையைச் சோ்ந்தவா் சுனில். சமையல் தொழிலாளி. இவரது மனைவி ஸ்மிதா (36). தம்பதியரிடையே அண்மைக்காலமாக குடும்ப தகராறு இருந்ததாம்.
இந்த நிலையில் ஸ்மிதா சனிக்கிழமை வீட்டு படுக்கை அறையில் உடல் கருகிய நிலையில் சடலமாக கிடந்தாா். கொல்லங்கோடு காவல் நிலைய ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையிலான போலீஸாா், அவரது சடலத்தை கைப்பற்றினா்.
மேலும், அவரது தாய் அளித்த புகாரின்பேரில், சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்கள்.