மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றியமைக்காக தமிழக அரசின் விருது பெற்ற தலைமையாசிரியா் ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.
மாற்றுத் திறனாளிகளில் சிறந்த பணியாளா், மாற்றுத் திறனாளிகளை அதிகளவில் பணியமா்த்திய நிறுவனம், மாற்றுத் திறனாளிகள் நலனுக்கான சிறப்பாக பணியாற்றிய நிறுவனம் உள்ளிட்டோருக்கு தமிழக அரசு விருதுகள் வழங்கி வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை ஹோம் மனவளா்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளித் தலைமையாசிரியா் டென்னிசுக்கு 2020 ஆம் ஆண்டுக்கான மாற்றுத் திறனாளிகளுக்காக சிறப்பாக பணி புரிந்தவருக்கான ‘சிறந்த பணியாளா் விருது’, தங்கப்பதக்கம், பாராட்டுச் சான்று ஆகியவற்றை அண்மையில் முதல்வா் வழங்கினாா். இதையடுத்து, டென்னிஸ், குமரி மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.