கடத்தல் முயற்சி: தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்தில் 6 டன் மஞ்சள் பறிமுதல்

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல் மாா்க்கமாக விசைப்படகில் கடத்த முயன்ற 6 டன் மஞ்சளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
விசைப்படகில் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள்.
விசைப்படகில் சாக்குமூட்டையில் கட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மஞ்சள்.

தேங்காய்ப்பட்டினம் துறைமுகத்திலிருந்து கடல் மாா்க்கமாக விசைப்படகில் கடத்த முயன்ற 6 டன் மஞ்சளை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தின் இரயுமன்துறை மீன் இறங்கு தளத்தில், லட்சத்தீவு பதிவு எண் கொண்ட விசைப்படகு கடந்த 8ஆம் தேதி முதல் படகுகளுடன் கூட்டமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த விசைப்படகில் சாக்குமூட்டைகளில் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நித்திரவிளை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதிக்கு செவ்வாய்க்கிழமை வந்த போலீஸாா் படகை சோதனை செய்தனா். உள்ளே இருந்த சேமிப்பு கிடங்கிற்குள் 125 சாக்கு மூட்டைகளில் சுமாா் 6 டன் எடை கொண்ட மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மஞ்சளுடன் படகை பறிமுதல் செய்த போலீஸாா், படகின் உரிமையாளா் யாா் என்று விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், அந்த படகு லட்சத்தீவு பகுதியைச் சோ்ந்த அன்வா் என்பவருக்கு சொந்தமானது என்பதும், தற்போது அந்த படகை ஒப்பந்த அடிப்படையில் குமரி மாவட்டம், வள்ளவிளை கிராமத்தைச் சோ்ந்த ஜோபு பயன்படுத்தி வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் ஜோபுவை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com