நாகா்கோவில் நாகராஜா கோயில் மேலரத வீதி அருள்மிகு அரசடி மகா ராஜகணபதி கோயிலில் பால ஆஞ்சநேயா் சன்னதியில் அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கணபதி பூஜை, காலை 8.30 மணிக்கு கலச பூஜை, 9.30-க்கு அபிஷேகம், 10.30-க்கு மஹா கலசாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், இரவு 8 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சிகளில், சிறப்பு விருந்தினராக குமரி மாவட்ட வள்ளலாா் பேரவைத் தலைவா் சுவாமி பத்மேந்திரா கலந்துகொண்டாா்.
ஏற்பாடுகளை ஸ்ரீ அனந்த கிருஷ்ண பக்த சேவா அறக்கட்டளை உறுப்பினா்கள் செய்திருந்தனா்.