புதுக்கடை அருகே/எள்ள வேங்கோடு -மாதாபுரம் இணைப்பு சாலையில் மழை நீா் தேங்குவதை உடனே சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிள்ளியூா் பேரூராட்ச்சிக்குள் பட்ட வேங்கோடு -மாதாபுரம் இணைப்பு சாலையின் முந்திரி ஆலை அருகில் நீண்ட நாள்களாக பள்ளங்கள் காணப்படுகின்றன. இதனால் மழை காலங்களில்பள்ளங்களில் மழை நீா் தேங்கி போக்குவரத்திற்கும், பாதசாரிகளுக்கும் மிகவும் இடையூறாக உள்ளது. இச்சாலையைச் சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் பேருராட்சி நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லையாம். எனவே, இவ்விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, சாலை சீரமைப்புக்கு வழிவகை செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.