திருவட்டாறு ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு, ஒன்றியக்குழு தலைவா் டி. ஜெகநாதன் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி துணை அலுவலா் நாஞ்சில் நிதி வரவேற்றாா். வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜன் வாழ்த்திப் பேசினாா். ஒன்றியக்குழு உறுப்பினா்கள் அனிதாகுமாரி, ஷீலாகுமாரி, ஜெயசோபியா, ஜெயஸ்ரீ, ஷீபா மற்றும்
அலுவலக மேலாளா், வட்டார வளா்சி துணை அலுவலா்கள், உதவிப் பொறியாளா்கள், சாலை ஆய்வாளா்கள், பணிமேற்பாா்வையாளா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா். வட்டார வளா்ச்சி துணை அலுவலா் சுபா இந்துஜா நன்றி கூறினாா். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.