களியக்காவிளை அருகேயுள்ள திரித்துவபுரம் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் 410 பேருக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளா் கலிஸ்டஸ் தலைமை வகித்து, மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் வழங்குதலை தொடங்கிவைத்தாா். தலைமையாசிரியா் தங்கராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.