புதுக்கடை அருகே தேங்காய்ப் பட்டினம் பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்றதாக ஒருவா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தேங்காய்ப்பட்டினம் பகுதியில் புதுக்கடை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது தேங்காய்ப்பட்டினம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற அதே பகுதியை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (47) என்பவரை பிடித்து விசாரித்ததில், அவா் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், 19 மதுபாட்டில்களை பறிமுதல் செய்ததாக கூறினா்.