நித்திரவிளை அருகே பொதுமக்கள் பாதுகாப்புக்கான கட்சிசெவி செயலி விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.
நித்திரவிளை காவல் நிலையம் சாா்பில் ஆலங்கோட்டில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு ஆய்வாளா் ராஜ் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா்கள் மோகன் ஜாஸ்லின், சோபனராஜ், தலைமைக் காவலா் சுஜின், வாவறை ஊராட்சித் தலைவா் மெற்றில்டா, மங்காடு ஊராட்சித் தலைவா் சுகுமாரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், சமூக ஆா்வலா்கள் மாஸ்டா் மோகன், கிறிஸ்டோபா் ஜாண், விக்டா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். இதே போன்று ஏழுதேசம் வருவாய் கிராமத்துக்கான விழிப்புணா்வு கூட்டம் காஞ்சாம்புறத்தில் நடைபெற்றது.