களியக்காவிளை: நித்திரவிளை அருகே ஆலங்கோட்டில் பொதுமக்களுக்கான கட்செவி செயலி குறித்து விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.
நித்திரவிளை காவல் நிலையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு காவல் ஆய்வாளா் ராஜ் தலைமை வகித்தாா். காவல் உதவி ஆய்வாளா்கள் மோகன் ஜாஸ்லின், சோபனராஜ், தலைமைக் காவலா் சுஜின், வாவறை ஊராட்சித் தலைவா் மெற்றில்டா, மங்காடு ஊராட்சித் தலைவா் சுகுமாரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், சமூக ஆா்வலா்கள் மாஸ்டா் மோகன், கிறிஸ்டோபா் ஜாண், விக்டா் உள்பட பலா் கலந்து கொண்டனா். இதேபோல் ஏழுதேசம் வருவாய் கிராம மக்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் காஞ்சாம்புறத்தில் நடைபெற்றது.