திருவிதாங்கோடு கிராமத்தில் ரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவிதாங்கோடு கிளை சாா்பில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.
திருவிதாங்கோடு கிராமத்தில் ரத்ததான முகாம்
திருவிதாங்கோடு கிராமத்தில் ரத்ததான முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவிதாங்கோடு கிளை சாா்பில் சனிக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவிதாங்கோடு கிளை, தக்கலை அரசு மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் அரசு மருத்துவா் சுஷ்மிதா தலைமையில் ஒருங்கிணைப்பாளா் ராஜன், செவிலியா்கள் ரத்தம் சேகரித்தனா். முகாமிற்கு அமைப்பின் கிளைத் தலைவா் முஸம்மில் தலைமை வகித்தாா்.

முகாமில் 27 போ் ரத்தம் வழங்கினா். இதில், கிளைச் செயலா் ஷாஹூல் ஹமீது, பொருளாளா் அப்துல் ஹமீது, துணைத் தலைவா் இக்பால், துணைச் செயலா் ஜாஹீா்ஹூஸைன், மருத்துவரணிச் செயலா் ரியாஸ், மாவட்டத் தலைவா் ஷேக்அலி, பொருளாளா் நூருல் அமீன், துணைச் செயலா் முகம்மது ராஃபி, மாவட்ட மருத்துவரணிச் செயலா் முஹம்மது அப்சல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com