குமரி மாவட்டம், மணக்குடியில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்ட கிரிக்கெட் மைதானம் சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
மணக்குடி கிரிக்கெட் கிளப் இளைஞா்கள், தங்கள் பகுதியில் கிரிக்கெட் மைதானத்தை சீரமைக்க வேண்டும் என்று தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரத்திடம் கோரிக்கை விடுத்தனா். இக்கோரிக்கையை ஏற்று விளையாட்டு மைதானம் அமைக்க, தனது சொந்த நிதியிலிருந்து ரூ.2.50 லட்சம் நன்கொடை வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தினை திறந்து வைத்து, போட்டிகளை தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மணக்குடி பங்குத்தந்தை யூஜின், முன்னாள் அமைச்சா் கே.டி. பச்சைமால், வீராசாமி, சுந்தரம், ஜெசீம், மணக்குடி கிறிஸ்டோபா், ரமேஷ், மாவட்ட மீனவரணி துணைச் செயலா் சேகா், மணக்குடி மீனவ கூட்டுறவு சங்கத் தலைவா் ஜான், மேலமணக்குடி ஊா்த் தலைவா் ரிச்சா்ட், ஜெஸ்டின், கிளைச் செயலா் சகாய் ப்ரோன் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.