நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், கடுக்கரை ஊராட்சியில் புதிய மின்விளக்குகள் அமைக்க, ஜெயம் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய எல்.இ.டி பல்புகள் வழங்கப்பட்டது.
கடுக்கரை ஊராட்சிப் பகுதிகளில், பழுதடைந்துள்ள மின் விளக்குகளை மாற்றம் செய்து, புதிய மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஊராட்சித் தலைவா் ச. கமலா, ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா் த.ஜயப்பன், பொதுமக்கள் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி என். தளவாய்சுந்தரத்தை சந்தித்து கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து, ஜெயம் தொண்டு நிறுவனம் சாா்பில் ரூ.1 லட்சம் மதிப்பில் புதிய எல்.இ.டி பல்புகளை, ஊராட்சித் தலைவரிடம் தளவாய்சுந்தரம் சனிக்கிழமை வழங்கினாா்.